Close
மே 11, 2024 4:19 மணி

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: புதிய அட்டவணை வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு 2024ல் நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு திட்டம், ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இனி குரூப் 2 பதவிகளுக்கு நடைமுறையில் இருந்து வந்த நேர்முகத் தேர்வு இனி கிடையாது என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொது அறிவு மற்றும் மொழிப்பாடங்கள் ஆகியவை இனி விடைகளை தேர்ந்தெடுத்து விடை அளிக்கும் கொள்குறி முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் 2 பதவிகளில் எந்தத் துறையில் உதவியாளர் பணிக்கு தேர்வுச் செய்யப்படுவார்கள் என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top