நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், செப். 20, 21 தேதிகளில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் அக். 4,5ம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான இபிஎஸ், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில், தமிழகம் முழுவதும் சூறாவளி தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் செப். 19,20,21 ஆகிய 3 நாட்கள் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தார். அதன்படி செப்., 19-ம் தேதி இன்று ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகள், 20-ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர், 21-ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் இபிஎஸ் பிரச்சாரம் நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அறிவிக்கப்பட்டபடி அவர் ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மாற்றம் செய்யப்பட்டது. செப்.,20, 21ம் தேதி (நாளை மற்றும் நாளை மறுநாம்) நடைபெற இருந்த சுற்றுப்பயணம் அக்.,4, 5 தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.




