மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இந்த விழாவிற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
தி.மு.க அரசு மக்களின் நலன் காக்கும் அரசாக உள்ளது. அதனால் மக்களின் நலனுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
இதில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்டு போனவர்களுக்கும் எல்லாம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம் தகுதி உள்ளவர்களுக்கு மீண்டும் வழங்க இருக்கிறோம். மகளிர் எல்லோரும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஏறத்தாழ 20 துறை அதிகாரிகள் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களைப் பெற்று பட்டா மாறுதலாக இருந்தாலும் பட்டா பெறுவதாக இருந்தாலும் மின் இணைப்பு பெறுவதாக இருந்தாலும், வேளாண் மை துறையாக இருந்தாலும் அதிகாரிகள் மக்களின் குறைகள் எல்லாம் நிறைவு செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நலம் காக்கும் ஸ்டாலின் என்பது மிகப் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. உடல் பரிசோதனை முழுவதும் செய்து கொள்ளும் நிலையில் மருத்துவத்தை உங்களைத் தேடி வந்து செய்து கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
தாயுமானவர் திட்டம் மூலம் 80 வயதுடையவர்களுக்கு இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தாய் தந்தை இல்லா குழந்தைகளுக்கு அன்புக்கரம் நீட்டி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர்.
இதையெல்லாம் எதற்காக சொல்கிறேன் என்றால் இந்த திட்டங்கள் எல்லாம் பெயரளவில் இல்லாமல் அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது நமது அரசு என்பதற்காக தான்.
சோழவந்தான் தொகுதி தலைநகராக வாடிப்பட்டியில் தாலுகா கோர்ட்டாக இருந்தாலும், போக்குவரத்து துறை டிரான்ஸ்போர்ட் ஆபிஸாக இருந்தாலும் பல்வேறு முன்னோடி திட்டங்களை சோழவந்தான் தொகுதியில் கொண்டு வந்துள்ளோம். இங்கெல்லாம் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது
கருணாநிதி ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார் ஆறாவது முறையாக திராவிட மாடல் அரசின் முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். எத்தனை கூட்டணி வந்தாலும் யாரெல்லாம் போட்டி போட்டாலும்2026 ல் இங்கு இருக்க கூடிய தாய்மார்கள் சகோதரர்களின் ஆதரவோடு ஏழாவது முறையாக திமுக ஆட்சிக்கு வரும் இரண்டாவது முறை முதலமைச்சராக ஸ்டாலின் வருவார்
ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் சாதி வேறுபாடு இல்லாமல் சமுதாய வேறுபாடு இல்லாமல் கட்சி வேறுபாடு இல்லாமல் நலத்திட்ட உதவிகளை திமுக வழங்குகிறது என்று சொல்லி நிறைவு செய்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பேரூர் செயலாளர் பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன், சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், வினோத் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.




