நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுகக் கூட்டத்தில் ராஜேஷ்குமார், எம்.பி., கலந்து கொண்டு பேசினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அறிமுக கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. நாமக்கல் மாநகர செயலாளர்கள் ஆனந்த், பூபதி, மாநகராட்சி மேயர் கலாநிதி, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நவலடி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கிருபாகரன், துணை அமைப்பாளர்கள் திருஞானமூர்த்தி, உதயகுமார், இனியன், நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், ராஜேஷ்குமார், எம்.பி., நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொறியாளர் அணி நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். அப்போது, 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளையும் வெற்றி பெறச்செய்யும் வகையில் அனைவரும் இனைந்து பாடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பொன் சித்தார்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




