Close
மார்ச் 7, 2026 1:17 மணி

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை பூத் ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும்: எம்.பி., வேண்டுகோள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற, நாமக்கல் சட்டசபை தொகுதி பூத் ஏஜெண்டுகள் ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., பேசினார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, திமுக பூத் ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும் என ராஜேஷ்குமார் எம்.பி., கூறினார்.

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், நாமக்கல் சட்யசபை தொகுதி பூத் ஏஜெண்டுகளுக்கான ஆ@லசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசியதாவது: இந்திய தேர்தல் கமிஷன் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவத்தை கொடுத்து வருகின்றனர். அதை சரியான முறையில், பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

இந்த பணிகளை பூத் ஏஜெண்டுகள் கண்காணித்து வாக்காளர்களுக்கு உதவிட வேண்டும். ஒவ்வொரு பூத்திற்கும், திமுக சார்பில், அந்த பூத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 8 முதல் 12 பாக முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

அடுத்த மாதம் 4ம் தேதி வரை சிறப்பு திருத்தம் நடைபெறும். வாக்காளர் வெளியூர் சென்றிருந்தாலும், அவர்களை வரவழைத்து, கணக்கெடுப்பு படிவத்தை பெற்று, அவர் மூலம் நிரப்பி கொடுக்கவேண்டும். யார் பெயரும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கடந்த 2021ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை ஒப்பிட்டு பார்த்து, சிறப்பு திருத்த முகாமை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர சேயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top