தமிழக துணை முதலமைச்சர் உதய ஸ்டாலின் பிறந்த நாளில் நாமக்கல், ராசிபுரம் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 17 குழந்தைகளுக்கு, ராஜேஷ்குமார் எம்.பி., தங்க மோதிரம் அணிவித்தார்.
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சரும்ன உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நவ. 27ம் தேதி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., அறிவித்திருந்தார்.
இதையொட்டி நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகள், ராசிபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகள் என மொத்தம் 17 குழந்தைகளுக்கு, மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., தங்க மோதிரம் அணிவித்து, பெற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, மாநில திமுக மகளிர் தொண்டரணி செயலாளர் ராணி, மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், நகர திமுக செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், மோகனூர் ஒன்றிய செயலாளர் நவலடி, வடிவேல், முரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




