Close
செப்டம்பர் 20, 2024 5:36 காலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: பாஜக இரண்டு நாளில் முடிவை அறிவிக்கும்: கே.பி. ராமலிங்கம் பேச்சு

ஈரோடு

ஈரோட்டில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக்கூட்டத்தில் பேசுகிறார், அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாரதிய ஜனதா கட்சி இன்னும் இரண்டு நாளில் முடிவை அறிவிக்கும் என்றார் கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம்.

ஈரோடு பாஜக கட்சி அலுவலகத்தில்  நடந்த நிர்வாகிகள்  கூட்டத்தில் பங்கேற்ற அவர்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:  இந்த இடைத்தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற வேட்பாளரை தோற்கடிப்பதற்கான வியூகம் வகுப்பதற்காகவே  இந்த கூட்டம் நடைபெறுகிது.

இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஊழலுக்கும் தவறான செயல்பாடுகளுக்கும் அங்கீகாரம் கொடுத்தது போல் ஆகிவிடும். அதற்கு  முற்றுப்புள்ளி வைக்க   திமுகவை வீழ்த்த வேண்டும் என்று பாஜக கருதுகிறது.

திமுகவை வீழ்த்தும் சக்தி பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. அதிமுகவை சேர்ந்த இரண்டு அணி தலைவர்களும் பாஜக ஆதரவை கோரியுள்ளனர். அதில், ஈரோடு கிழக்குத்தொகுதியில்  பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவேன் என்று  ஓபிஎஸ் கூறியுள்ளதற்கு மகிழ்ச்சி.

இன்னும் இரண்டு தினங்களில் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை  பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடுவார். அதிமுகவின் இரண்டு அணிகளும் சேர்ந்து கூட போட்டியிடலாம். இரட்டை இலை கிடைக்குமா கிடைக்காதா என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொருத்தது.

எங்களை பொறுத்தவரை திமுகவை வீழ்த்த  நினைக்கும் அனைத்து சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும். அதிமுக இரண்டு அணிகளை ஒருங்கிணைப்பதற்காக பாஜக ஒன்றும் மத்தியஸ்தம் செய்யாது.

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு பாஜகவை சந்தித்ததை குறிப்பிட்டு எதற்காக அவர்கள்  அந்தக் கட்சியை நடத்துகிறார்கள்  என்று கூறியுள்ளார்.

அவரது தாத்தா கருணாநிதி வாஜ்பாயிடம் கூட்டணி வைத்து  அமைச்சரவையிலேயே இடம் கேட்டு பெற்றார். அப்போது அமைச்சராக  இருந்த  முரசொலிமாறன் உடல் நலம் குன்றி ஆறு மாத காலம் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது கூட வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்த போதுதான்.

இதை  விளைடாட்டு அமைச்சர் உதயநிதி மறக்கக்கூடாது. அவர் சிறு பிள்ளைத்தனமாக பேசுகிறார். அதனால் தான் அவருக்கு விளையாட்டு துறை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு- தமிழகம் பிரச்னையை கிளப்பி அரசை முடக்க நினைப்பதாக செயல்படாத அரசை சேர்ந்தவர்கள் தான் கூறுகிறார்கள்.

எதற்காக கவர்னர் மசோதாவில் கையழுத்திடவில்லை என்பதை அண்ணாமலை விளக்கி உள்ளார்.  சர்ச்சைக்குரிய பல மசோதாக்கள் உள்ளன.  அதில் ஒன்று தனியார் கல்லூரிகளை அரசுடைமையாக்கும் மசோதா.  அண்ணாமலை கூறிய  பிறகு தான் அது பற்றி  வெளியில் தெரியவந்தது.

பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறையை கலைப்போம் என்று கட்சித் தலைவர் அண்ணாமலை கூறியது கோயில்களில் நடைபெறும் ஊழல்களை கண்டித்துதான்.  தைரியம் இருந்தால் பழனி, திருச்செந்தூர் போன்ற புகழ்வாய்ந்த கோயில்களின் வருமானம் எவ்வளவு செலவினம் எவ்வளவு என வெள்ளை அறிக்கை வெளியிடட்டும்.

பக்தி குழுக்களிடம் கோயில்கள் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு.  முடிந்தால் திருக்கோவிலில் சம்பந்தமாக தனி பட்ஜெட் போடலாம்.  கோயில்கள் வேண்டாம் என்பதல்ல எங்கள் நிலைப்பாடு என்றார் கே.பி. ராமலிங்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top