Close
மே 20, 2024 2:13 மணி

பறக்கும்படை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க கண்காணிப்பு அலுவலர் நியமனம்: மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர்- ஆட்சியர் கவிதாராமு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல்களில் மாதிரி நடத்தை விதிகள்கடைப் பிடிக்கப்படுவதை 24 மணிநோமும் கண்கா ணித்திடும் பொருட்டு ஒவ்வொரு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும் பறக்கும் படையி னர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பறக்கும் படையினரின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திட மாவட்ட அளவில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்து றை அலுவலர் கண்காணிப்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பறக்கும் படையினரால் வாகனத் தணிக்கை யின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் புடைய கருவூவ அலுவலகங்களில் பாதுகாப் பாக வைக்கப்படும்.

பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப் படும் பொருட்கள் மற்றும் ரொக்கம் குறித்த விபரங்களுக்கு பறக்கும் படை தலைமை அலுவலரால் தொடர்புடைய நபருக்கு உரிய அத்தாட்சி கடிதம் வழங்கப்படும். இந்த அத்தாட்சி கடித நகலுடன் பறிமுதல் செய்யப் பட்ட தொகை மற்றும் பொருட்களை மீளப் பெற தொடர்புடைய நபர்கள் விண்ணப்பித் திடலாம்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், மாவட்ட கருவூல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல அலுவலர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு மேல்முறையீட்டு குழு இந்த விண்ணப்பங் களை பரிசீலனை செய்து கைப்பற்றப்பட்ட பொருட்களை மீள வழங்குதல் குறித்து முடிவுகள் மேற்கொள்ளும்.

இந்த மேல்முறையீட்டுக் குழுவின் குழுக் கூட்டும் அலுவலராக மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலஅலுவலர் செயல் படுவார். அவரது அலைபேசி எண் 9442056878 ஆகும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top