Close
மே 20, 2024 1:20 மணி

வேலூர் தொகுதியில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து டாக்டர் அம்பேத்கர் பேரவையினர் வாக்கு சேகரிப்பு

பிரதமர் நரேந்திர தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் மத்தியில் மூன்றாவது முறையாக மீண்டும் தொடர வேலூர் எம்.பி. தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு தாமரை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு, குடியாதத்தத்தில் பல்வேறு இடங்களில் புதிய நீதிக் கட்சியின் டாக்டர் அம்பேத்கர் பேரவையினர் வாக்குகளைச் சேகரித்தனர். குடியாத்தம் நகரம், சுற்றுப்புறக் கிராமங்களில் அவர்கள் வாக்குகளைச் சேகரித்தபோது, மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி துண்டுப் பிரசுரங்களை அளித்தனர்.
இதேபோல், டாக்டர் ஏ.சி.சண்முகம் சார்பில் கடந்த 11 மாதங்களாக, 360 மருத்துவ முகாம்கள், 7 வேலைவாய்ப்பு முகாம்கள், மாரத்தான் போட்டிகள் , கிரிக்கெட்- கபடி- கோலப் போட்டிகள் என்று பல வகையான விழாக்களை நடத்தி லட்சக்கணக்கானோருக்கு உதவியதை புதிய நீதிக் கட்சியினர் நினைவுப்படுத்தினர்.
இந்தச் சாதனைகள் தொடர டாக்டர் ஏ.சி.சண்முகத்துக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு புதிய நீதிக் கட்சியின் மண்டல ஐ.டி.விங் செயலாளரும் டாக்டர் அம்பேத்கர் பேரவை ஒருங்கிணைப்பாளருமான தி.பிரவீன்குமார் தலைமை தாங்கினார்.
புதிய நீதிக் கட்சியின் ஒன்றிய செயலாளர் இராம.இளங்கோவன், பேரவைத் தலைவர் நத்தம் நாகராஜ், நத்தம் விக்னேஷ், ஜெயகோபி, தணிகைவேல், அன்பரசன், தமிழ் மாறன், வசந்த், மகளிர் இணைச் செயலாளர் சங்கீதா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். வாக்கு கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் எங்கள் வாக்கு ஏ.சி.எஸ்.க்கே என்று மக்கள் திரளாக ஆதரவு தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top