Close
மே 20, 2024 12:42 மணி

திருவண்ணாமலையில் நாளை எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்! ஏற்பாடுகள் தீவிரம்

மேடை அமைக்கும் பணியினை ஆய்வு செய்த மாவட்ட செயலாளர்.

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாளை ஆதரித்து, வியாழக்கிழமை மாலை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறாா்.
இதற்காக, திருவண்ணாமலை-வேலூா் சாலை, ஈசான்ய மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை மாலை சரியாக 7 மணிக்கு திருவண்ணாமலைக்கு வரும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. ஆகிய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளரான கலியபெருமாளை ஆதரித்துப் பேசுகிறாா்.
இதற்கான ஏற்பாடுகளை தொகுதி தோ்தல் பணிக்குழுவைச் சோ்ந்த அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ, மாவட்டச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

முன்னதாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வருகையை ஒட்டி திருவண்ணாமலை ஈசானிய மைதானம் அருகில் மேடை அமைக்கும் பணிகளை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளர், மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளைப் பார்வையிட்டனர். இந்நிகழ்வின் போது நகரச் செயலாளர் செல்வம் , நகர மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், திருவண்ணாமலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை செயலாளர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்து சென்று அதிமுக சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
முன்னதாக கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள புதுப்பாளையம், தேவனந்தல், காரப்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் கலியபெருமாள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
முன்னதாக கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள பல்வேறு ஊராட்சிக்கு வருகை தந்த வேட்பாளர் கலியபெருமாள் மற்றும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஏராளமான கிராம மக்கள் கூடி நின்று உற்சாகமாக பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கு சென்ற வேட்பாளர் கலியபெருமாள் நாகாபாடி கிராமத்தில் அதிமுக வர்ணம் பொருந்திய கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்தப் பிரச்சாரத்தின் போது அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட கவுன்சிலர் அரவிந்தன், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கலைப்பிரிவு செயலாளர்கள் வழக்கறிஞர் அணி தலைவர் , கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அதிமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top