நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்து தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி, நாமக்கல் மாவட்டத்திலுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக புதிய வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி
- ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு, நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
- சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதிக்கு, நாமக்கல் சமூகப் பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர்,
- நாமக்கல் சட்டசபைத் தொகுதிக்கு நாமக்கல் ஆர்டிஓ,
- பரமத்திவேலூர் சட்டசபைத் தொகுதிக்கு நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
- சிறுபான்மையினர் நல அலுவலர்,
- திருச்செங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு திருச்செங்கோடு ஆர்டிஓ,
- குமாரபாளையம் சட்டசபைத் தொகுதிக்கு, நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
ஆகியோர் வாக்காளர் பதிவு அலுவலர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.