Close
ஜூலை 7, 2024 11:19 காலை

ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்க கூடாது: தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அளித்துள்ள கோரிக்கை மனு அளிக்க வந்த தமிழக மக்கள் மேடை நிர்வாகிகள்

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதிக்கக்கூடாது என மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தி உள்ளது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு சார்பாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் வருகின்ற 22 மற்றும் 29 தேதிகளில் காக்கிச்சட்டை மற்றும் கைத்தடிகளுடன் ஊர்வலம் நடத்தப்போவதாகத் தெரிகிறது.

கடந்த காலங்களில் இந்த அமைப்பு நடத்திய பேரணியில் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கை சீர்குழைக்கும் வகையில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்பதை தங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேர்ம்.

மேலும், இந்தப் பேரணி சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மக்கள் ஒற்றுமையை சீர்குலைக் கும் வகையிலும் இருக்கும் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் நடத்தும் பேரணிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்பதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top