Close
செப்டம்பர் 19, 2024 9:42 காலை

ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தக்கோரி தர்ணா

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நடந்த தர்ணா போராட்டம்

புதுக்கோட்டை: அரசாணை 204 -ன்படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை தர்ணா போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.சரவணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரி.இராமு தொடக்கவுரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் மாவட்டச் செயலாளர் கா.செயபாலன், மற்றும் நிர்வாகிகள் தனலெட்சுமி, திருப்பதி உள்ளிட்டோர் பேசினர். தோழமைச் சங்க நிர்வாகிகள் மு.முத்தையா, சோமசுந்தரம் ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் க.கருப்பiயா நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் கணேசன் வரவேற்றார். பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

அரசாணை 204-ன்படி ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். சிகிச்சை செலவை குறைத்து வழங்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக களைய வேண்டும் அல்லது திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமென போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top