Close
செப்டம்பர் 19, 2024 11:10 மணி

திருச்சி மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்திலிருந்து ஜோசப் கல்லூரி வளாகத்தின் வழியாக செல்லும் குடிநீர் உந்து குழாய் உடைப்பு ஏற்பட்டத்தின் காரணமாக பராமரிப்பு பணி 01.03.2024 அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக  கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை, ஆகிய பகுதிகளில் 02.03.2024 ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

03.03.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top