Close
ஜூலை 7, 2024 9:55 காலை

பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு நிகழ்வு

பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்வு சிகரம் தொடு பெண்ணே கல்லூரி முதல்வர் முனைவர் வனஜா தலைமையில் நடைபெற்றது.

பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி இருளாயி மற்றும் தலைமை காவலர் ஆரோக்கிய செலன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்கள்

நிகழ்ச்சியில் பேசும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி இருளாயி

தமிழ் துறையைச் சார்ந்த உதவி பேராசிரியர்கள் திருமதி நித்யா, மற்றும் திருமதி முனீஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

விழா ஏற்பாடுகளை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் பக்தவச்சலம் மற்றும் கணித துறையைச் சார்ந்த திருமதி. முத்துலட்சுமி, திரு. முகமது அபுபக்கர், திரு. சந்திரசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top