Close
ஜூலை 7, 2024 9:31 காலை

பாண்டமங்கலத்தில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொத்தனூரில் செயல்பட்டு வரும் வேர்டு நிறுவனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா, பாண்டமங்கலம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். முன்னிலை வகித்து பேசிய பாண்டமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் முருகவேல், பெண்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் பெண்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.

கரூர் சைக்கோ அறக்கட்டளை இணை இயக்குனர் பிலோராணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பேசினார். கந்தசாமி கண்டர் கலைக் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர் விஜயா, பாண்டமங்கலம் பேரூராட்சி உறுப்பினர்கள் கல்பனா, மஞ்சுளா, மகளிர் அணி செயலாளர் சசிகலா மற்றும் திரளான மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை வக்கீல் பவினேஷ்கர்ணன் தொகுத்து வழங்கினார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வேர்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் சாந்தி வரவேற்று பேசினார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுமதி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top