Close
செப்டம்பர் 19, 2024 7:22 மணி

மதுரையில் இரண்டு பசு மாடுகளை கடத்திச் சென்ற மூவர் கைது: காவல்துறை விசாரணை

மதுரை விராட்டிபத்து அருகே, 2 பசுமாடுகளை வேனில் கடத்திச் சென்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.மதுரை விராட்டிபத்து ஜெய் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் பால் வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த 6 ஆம் தேதி இரவு தன் வீட்டின் அருகே கட்டிப் போட்டு வளர்த்து வரும் இரு ஜெர்சி பசு மாடுகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது இரு பசு மாடுகளும் காணாமல் போன நிலையில் அக்கம் பக்கம் தேடி பார்த்த போது மாடு கிடைக்காததால் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் உதவி ஆய்வாளர் சந்தான போஸ் தலைமையிலான தனிப்படையினர், அப்பகுதியில் உள்ள விராட்டிபத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மாடுகளை கடத்தி வேன்களில் ஏற்றி சென்றது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் நிலக்கோட்டை சேர்ந்த ஈஸ்வரன்,ரித்திக் ரோஷன், சாம்ராஜ் ஆகிய மூவரை கைது செய்த காவல்துறையினர் அவர்கள், கடத்தி கொண்டு சென்ற இரு பசுமாடுகளை, பறிமுதல் செய்துள்ளனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top