Close
செப்டம்பர் 28, 2024 11:28 மணி

திருச்சி மாநகர் மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி மாநகர் மாவட்டம மார்க்கெட் கோட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

திருச்சி மாநகர் மாவட்டம்  மார்க்கெட் கோட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்  கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான  திருச்சி அருணாச்சலமன்றத்தில் நடந்தது. மாவட்டதலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமை தாங்கினார்.மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, பொதுசெயலாளர் ராஜா, மார்க்கெட் கோட்ட பொறுப்பாளர் பகதூர்ஷா, சையது நூர் அகமது, ஆர் ஆர் ராஜா, அஸ்கர், கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடத்தவேண்டும், ஒவ்வொரு பூத்திற்கும் 20 நிர்வாகிகள் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது, ⁠நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top