Close
ஜூன் 2, 2025 8:52 மணி

தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு தஙகக்கவச அலங்காரம்

தை மாத அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம்

தை மாத அமாவாசையை முன்னிட்டு, பழையபாளையம் அங்காளம்மனுக்கு, சிறப்பு அபிசேகம் மற்றும் தங்கக்கவச அலங்காரம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம், பழையபாளையம் ஏரிக்கரையில், சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோயில் உள்ளது.

நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் தினசரி இக்கோயிலுக்கு வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

தை அமாவாசையை முன்னிட்டு, இந்தக்கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில், அம்மனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top