Close
பிப்ரவரி 22, 2025 7:34 மணி

நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை, 8 தாலுகாக்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
பொது விநியோகத் திட்டத்தின் மூலம், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ஸ்மார்ட் ரேசன் கார்டு கோருதல், செல்போன் நம்பர் பதிவு போன்ற சேவைகளை மேற்கொள்வதற்காக ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் மாதம்தோறும் 2ம் சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

மேலும், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், ரேஷன் கார்டுகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.

இந்த மாதத்திற்கான குறைதீர் முகாம், வரும் 8ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், ராசிபுரம், மோகனூர். சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் பிரிவில், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, ரேஷன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ளவும், பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கும், இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top