திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலரும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான தீபக் ஜேக்கப் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு செய்தாா்.
ஆய்வுக் கூட்டத்தை தொடர்ந்து திருவண்ணாமலை காந்திநகா் மற்றும் கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சோமாசிப்பாடி பகுதிகளில் புதிதாக முதல்வா் மருந்தகங்கள் அமையும் இடங்கள், கிரிவலப்பாதையில் கட்டப்படும் பணிபுரியும் மகளிா்களுக்கான தோழி விடுதியின் கட்டுமானப் பணி ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, சோமாசிப்பாடியில் கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பணி, கீழ்பென்னாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியா்களின் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு ஆகியவற்றை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தீபக் ஜேக்கப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமாசிப்பாடி ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணியினை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
பின்பு கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர்களின் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டினை ஆய்வு மேற்கொண்டு, பதிவறையினைபார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ளும் பணியாளர்கள் ஜிபிஎஸ் செயலியை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, சாா்-ஆட்சியா் பல்லவி வா்மா, வருவாய் கோட்டாட்சியா்கள் செந்தில்குமாா் (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.