Close
மார்ச் 3, 2025 8:23 மணி

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடுகட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்ட ம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எஸ்சிபிஏஆர் திட்டத்தின் கீழ் ரூ 5 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிருஷ்ணன், செயற்பொறியாளர் இளங்கோ, திருவண்ணாமலை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சையத் அகமது பயாஸ், புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, இன்ஜினியர் குமார், சௌந்தர்ராஜன், மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top