நாமக்கல்லில் 7ம் தேதி முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் படைவீரர்களின் விதவையர்கள், படைவீரர்கள் குடும்பத்தைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், வரும் 7ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிய உள்ளார். எனவே நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தை சார்ந்தோர்கள் மற்றும் படைப்பணியில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தார், தங்களின் கோரிக்கை மனுக்களை இரண்டு பிரதிகள் எழுதிக் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.