Close
மார்ச் 11, 2025 1:00 காலை

திருவண்ணாமலை வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் , கீழ்பென்னாத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் அரசின் அரசின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் மற்றும் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகங்களில் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான கலைஞரின் கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பழுது நீக்கம் செய்யும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், இலங்கைத் தமிழர்கள் வீடுகட்டும் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் வீடு கட்டும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்,  நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர்ன் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கத் திட்டம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நமக்கு நாமே திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஊராட்சிகள் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்தும், பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்கவும் துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) கிருஷ்ணன், செயற்பொறியாளர் இளங்கோ, உதவி திட்ட அலுவலர்கள், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் மற்றும் கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top