Close
மே 31, 2025 10:45 காலை

திருவண்ணாமலை தாலுகாவில் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு

மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் தர்ப்பகராஜ் தலைமையில் 6வது நாளாக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.

மேற்படி 1434-ம் பசலி வருவாய்த் தெர்வாய கணக்கு தணிக்கை மற்றும் மனுக்கள் மீது தீர்வு காணும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வட்டம், திருவண்ணாமலை தெற்கு உள்வட்டத்திற்குட்பட்ட சமுத்திரம், அரடாப்பட்டு, சு.பாப்பம்பாடி , கீழ்கச்சிராப்பட்டு , மேல்செட்டிப்பட்டு , கொளக்குடி உள்ளிட்ட 6 வருவாய் கிராமங்களைசேர்ந்த பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

இவற்றில் வீட்டுமனைபட்டா, பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாதது, பட்டா மாறுதல் உட்பிரிவு (கி.தி.அ), பட்டா மாறுதல் உட்பிரிவு (கு.வ.அ) நத்தம் பட்டா மாறுதல் உட்பிரிவு, அளந்து அத்து காட்டல், குடும்ப அட்டை வேண்டி, மகளிர் உரிமைத் தொகை கோரி, சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்கள் என மொத்தம் 75 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் உதவி இயக்குநர், நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறை சண்முகம், திருவண்ணாமலை வட்டாட்சியர் மோகனராமன், தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top