திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகிய கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சார்பில் 523 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கு டிஆர்ஓ ராம் பிரதீபன் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் தேன்மொழி வரவேற்றார். ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்துகொண்டு 523 பேருக்கு ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:
பொதுமக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதும், மேலும் அரசு உயர் அலுவலர்கள் மாதந்தோறும் ஒரு வட்டத்தை தேர்ந்தெத்து முகாமிட்டு அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அறியும் வகையில் அவர்களுக்கு விளக்கி, அதன்மூலம் அவர்கள் பயன்பெற வேண்டுமென்பதே இந்த முகாமின் நோக்கமாகும்
கலசபாக்கம் தொகுதியில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தென் மகாதேவ மங்கலம் கோயில் மாதிமங்கலம் தாமரைப்பாக்கம் கிராமங்களை இணைக்கும் விதத்தில் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
விவசாயிகள் பயன்பெறுவதற்காக சிறப்பு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அதன்படி உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத் துறை திட்டம் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் குறைந்த மகசூல் இழப்பு ஏற்படுவதை தடுக்க முதலமைச்சர் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், சிறுதானிய இயக்க திட்டம் போன்ற திட்டங்கள் உழவரைத் தேடி உழவர் நலத்துறை என்னும் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
நமது மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருப்பதால் இந்த முகாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற உள்ளது. இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் , தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் அறிந்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என கூறினார்.
முன்னதாக எம்எல்ஏ சரவணன் பேசியதாவது:
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கலசபாக்கம் தொகுதியின் மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களையும், அதிக அளவில் உயர்மட்ட பாலங்களையும் திறந்து வைத்து உள்ளார்கள். அதேபோல் கலசபாக்கம் தொகுதியை தனி தொகுதியாககருதி பல்வேறு திட்டங்களை முதன்முதலில் துவங்கி வைத்து வருகிறார்.
அதேபோல் தமிழ்நாட்டில் எந்த தொகுதியிலும் இல்லாத அளவிற்கு ரூ 99 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் கலசப்பாக்கம் தொகுதிக்கு மட்டும் வழங்கி உள்ளார்
கலசபாக்கம் தொகுதியில் 20 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாத திட்டங்கள் 4 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகால கோரிக்கைகள் திராவிட மாடல் ஆட்சியில் குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை கிராமங்கள் தோறும் வந்து கேட்க உள்ளேன் என்றார்.
நிகழ்ச்சியில் ஆர்டிஓ ராமகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் லலிதா, வட்ட வழங்கல் அலுவலர் ஜெகதீசன், பிடிஓக்கள் பாலமுருகன் அண்ணாமலை முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி, ராஜசேகரன், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.