Close
ஜூன் 6, 2025 2:37 மணி

லாரித்தொழில் மேம்பாட்டுக்கு தனி வாரியம் அமைக்க முன்னாள் அமைச்சர் தங்கமணி வேண்டுகோள்

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் முன்னாள் அமைச்சர், தங்கமணி எம்எல்ஏ.,

நாமக்கல், லாரித் தொழில் மேம்பாட்டுக்கு, மத்திய மாநில அரசுகள் தனி வாரியம் அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மாதந்திர செயற்குழு கூட்டம் அதன் தலைவர் அருள் தலைமையில்  நடைபெற்றது. சங்க கவுரவ தலைவர் வாங்கிலி முன்னிலை வகித்தார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி, எம்எல்ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். லாரி உரிமையாளர்கள் தரப்பில், தொழிலின் தற்போதைய நெருக்கடியான சூழல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, போலீசாரின் ஆன்லைன் அபராதம் விதிப்பதாலும், நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாலும், லாரித் தொழில் கடுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், போதிய வருவாய் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தனர்.

பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: நாமக்கல், ஈரோடு, சேலம் பகுதிகளில் லாரித் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. லாரி உரிமையாளர்களுடன் 25 ஆண்டுகளாக நெருங்கி பழகி வருகிறேன். அவர்களது பிரச்னைகள் பற்றி எனக்கு நன்கு தெரியும்.

மத்திய, மாநில அரசுகள் லாரித் தொழில் மேம்பாட்டுக்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன். லாரித் தொழில் முன்னேற்றத்திற்கு அதிமுக எப்போதும் துணையாக நிற்கும் என்றார்.

கூட்டத்தில் சங்கத்தின் பொருளாளர் சீரங்கன், உபதலைவர் பாலசந்திரன், உதவி தலைவர் குமரவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top