குவாரிகளில் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுத்தால் கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய தாலுகாக்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பர் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
அங்கு குவாரிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குவாரிகளில் விதிமுறைக்கு உட்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா எனவும் மண் சரிவு, பாறை சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா எனவும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலக பணியார்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேவேளையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டியெடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், தமிழ்நாடு சிறுகனிம சட்ட விதிகளின்படி உரிய அபராத நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.