ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், இயற்கை பேரழில் நிறைந்த ஜவ்வாது மலையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் இரண்டாவது கட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான கோடை விழாவை அடுத்த மாதம் 20ம் தேதி மற்றும் 21ம் தேதி ஆகிய 2 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து அரசுத்துறைகளின் சார்பில் பல்துறை பணி விளக்க கண்காட்சிகள் 2 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பேசியதாவது: ஜவ்வாதுமலையில் இந்த ஆண்டு 20, 21-ஆம் தேதிகளில் கோடை விழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
விழாவில், அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், பராம்பரிய கலை நிகழ்ச்சிகள், மலா் கண்காட்சிகள், காய்கறி கண்காட்சிகள், நாய் கண்காட்சிகள், தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் கண்காட்சி அரங்குகள் ஆகியவற்றை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கோடை விழா சிறப்பான முறையில் நடைபெற ஊரக வளா்ச்சி, காவல், வருவாய், வனம், போக்குவரத்து, போக்குவரத்துக் கழகம், தீயணைப்பு, மின் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை, பள்ளிக் கல்வி, கூட்டுறவு, கைத்தறி, கோ-ஆப்டெக்ஸ், விளையாட்டு, கலை, பண்பாடு உள்பட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
மேலும், அரசுத்துறைகளின் சார்பில் அதிக எண்ணிக்கையில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, நில அளவைகள் மற்றும் பதிவேடுகள் துறையின் உதவி இயக்குநா் சண்முகம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) கிருஷ்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் (திருவண்ணாமலை) வடிவேலன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.