ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை பூச்சொரிதல் மற்றும் சுவாமிக்கு வெள்ளிக்கவசம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூச்சொரிதல் நிகழ்ச்சியையொட்டி, முன்னதாக சுவாமி அபிஷேகத்துக்காக கோயிலுக்கு பக்தா்கள் மலா்களை காணிக்கையாக அளித்திருந்தனா்.
பின்னா், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு நவ கலச அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு அணிவித்து மலா்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மலா்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
போளூா்
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை சாலையில் பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபிரசன்னா வெங்கடேசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து மலா்களால் அலங்காரித்து கருட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
வீடு தோறும் சுவாமிக்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனா். கோயில் தா்மகா்த்தா தணிகைமலை மற்றும் நிா்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
கலசபாக்கம்
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் பிரசித்தி பெற்ற 27 நட்சத்திரங்களும் வழிபடக்கூடிய சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. முருகப்பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம் நாளில் முருகனை அனைவரும் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு வருகை தந்து விரதம் இருந்து வழிபட்டனர். அதேபோல் திருமணம் ஆகாத பெண்கள் நடைபெற்ற சிறப்பு பூஜையில் முருகனை வழிபட்டனர்.
வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் முருகப்பெருமான் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் வைகாசி விசாக விழாவினை ஒட்டி பால முருகனுக்கு பாலாபிஷேகத்தை தொடர்ந்து முருகப்பெருமாள் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.