Close
ஜூன் 17, 2025 7:45 மணி

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சி வடக்கு தெருவுக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியின் பல இடங்களில் கழிவு நீர் தேங்குவதால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்

இந்த ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் பணி செய்யும் நிலையில் அனைத்து பணியாளர்களும் தங்களது சொந்த பணிகளை பார்க்க சென்று விடுவதால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஊராட்சி செயலாளர் சொல்லியும் துப்புரவு பணியாளர்கள் கேட்க மறுப்பதாகவும் ஆகையால் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் தேங்காமலும் தொற்றுநோய் பரவி சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க முள்ளிப்பள்ளம் ஊராட்சி 1வது வார்டு முன்னாள் கவுன்சிலர் முல்லை சக்தி மற்றும் வார்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top