நாமக்கல் அருகே காதப்பள்ளி கிராமத்தில் உழவரைத்தேடி வேளாண்மை திட்ட விளக்க முகாம் நடைபெற்றது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா தலைமை வகித்தார். பயிர் காப்பீட்டு திட்ட வேளாண்மை உதவி இயக்குநர் சித்திரைச்செல்வி முன்னிலை வகித்தார். முகாமில், வேளாண்மையினை அடுத்த கட்ட நிலைக்கு எடுத்து செல்லும், பயிர் சார்ந்த தொழில்நுட்பங்கள், வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்ந்த திட்டங்கள், மானியங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு வேளாண் துறையினர் விளக்கம் அளித்துப் பேசினார்.
வேளாண்மை அலுவலர் தரணியா, வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் பாலாஜி, பட்டுவளர்ச்சித்துறையின் உதவி ஆய்வாளர் சாந்தி, காதப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் விபுலானந்தம் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.




