Close
மார்ச் 7, 2026 6:08 மணி

அரசு தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை பரிசு

வாடிப்பட்டி பேரூராட்சி பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

இந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் விஜயகுமார் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார். சங்கத் தலைவர் லெட்ஜர் கான் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் செந்தாமரைக்கண்ணன், பொதுச்செயலாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர் சசிகுமார் வரவேற்றார்.

இந்த விழாவில், 2024 25 ஆண்டு அரசு பொதுத்தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் பிடித்து சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை, விருதுகளும் அவர்களின் பெற்றோர்களுக்கு மரியாதை செய்தும் விளையாட்டு போட்டியில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவர்களுக்கு ஹாக்கி ஸ்டிக்கும் வழங்கப்பட்டது.

இதில், சங்க செயற்குழு உறுப்பினர்கள் சோனை சரவணன், பெரியசாமி, பால சந்தர், தீபன் சக்கரவர்த்தி ரமேஷ் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் பி.ஜி.ராஜா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முடிவில், சங்க பொருளாளர் பரணி ராஜா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top