Close
மார்ச் 7, 2026 1:34 மணி

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு

மாட வீதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு செய்தாா்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாட வீதியில் முதல் கட்டமாக ரூ. 17 கோடி மதிப்பீட்டில் 1 கிமீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து 2வது கட்டமாக ரூ 15 கோடி மதிப்பீட்டில் 1.7 கி.மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு , திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பணியை விரைவாகவும் தரமாக செய்கிறார்களா என்று தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்படும் குடிநீா் திட்டப் பணிகள், புதை சாக்கடை அமைக்கும் பணிகள், மின்வாரியம் சாா்பில் மேற்கொள்ளப்படும் மின் கம்பிகளின் புதைவடப் பணிகள், நெடுஞ்சாலைத்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

அப்போது, கிரிவலம் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் நெடுஞ்சாலை, மாநகராட்சி, மின் வாரியம் ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு, வட்டாட்சியா் மோகன்ராம் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top