Close
மார்ச் 7, 2026 4:26 மணி

ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை 24 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டம், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 13 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலிப்பணியிடமாக உள்ளன. இது குறித்த விவரம் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது .

இப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக தொகுப்பூதிய முறையில் முற்றிலும் தற்காலிகமாக நிபந்தனை அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள்-2ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் நிரப்பப்படவுள்ளது.

பட்டதாரி ஆசிரியருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பட்டதாரி ஆசிரியருக்கான பணியிடம் தற்போதைய நடைமுறையிலுள்ள அரசு விதிகளில் உள்ளவாறு பின்பற்றப்பட வேண்டும்.

நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் பதவி உயர்வு வாயிலாக நிரப்பப்படும் வரை அல்லது இக்கல்வியாண்டில் பள்ளி இறுதி தேர்விற்கு (ஏப்ரல், 2026 முடிய) முந்தைய மாதம் வரை இவற்றில் எது முன்னரோ அது வரை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ளவேண்டும்,

இதற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் எழுத்து மூலம் விண்ணப்பத்தை உரிய சான்றாவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சலிலோ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2வது தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு ஜூன் 24 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சேருமாறு அனுப்பவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top