தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
முதலாவதாக, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கொல்லிமலை கிளையினை பார்வையிட்டார். பின்னர் கொல்லிமலை லேம்ப் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள், ஓரிலேண்ட் பயணியர் தங்கும் விடுதி, ஓரிலேண்ட் காபி பிரிவில், காபி பவுடர் தயார் செய்யும் பணியை பார்வையிட்டார்.
தெம்பளம் லேம்ப் கூட்டுறவு சங்கம் மற்றும் ரேஷன் கடையை அவர் ஆய்வு செய்தார். பின்னர் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிக்கன நாணய கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு கம்ப்யூட்ட மயமாக்குதல் பணியை பார்வையிட்டார். மேலும் பவர் காடு மலைவாழ் மக்கள் லேம்ப் கூட்டுறவு சங்கத்தை ஆய்வு செய்தார்
பின்னர், நாமகிரிப்பேட்டை வட்டாரத்துக்குட்பட்ட முள்ளுக்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை மஞ்சள் கிடங்கு, கவுண்டம் பாளையம் பருத்தி கிடங்கு மற்றும் நகை கடன் வழங்கும் பிரிவினை கூட்டுறவு சங்க பதிவாளர் நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, துணைப்பதிவாளர் ஜேசுதாஸ், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க துணைப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், பயிற்சி அலுவலர் ஜீவிதா, சார்பதிவாளர்கள் தியாகராஜ், ஜோதிஸ்வரி, சதீஷ்குமார், சிவரஞ்சனி, நிர்மலா, விமலா, தேவகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



