Close
மார்ச் 7, 2026 4:56 மணி

விவசாயிகள் நிதி உதவி பெற 30-ம் தேதிக்குள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பி.எம்.கிசான் நிதி உதவி பெறும் விவசாயிகள் அடுத்த தவணை நிதி பெற வருகிற 30-ந் தேதிக்குள் பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் மாநில மற்றும் மத்திய அரசின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றை பெற விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படுகிறது.

விவசாய அடையாள எண் மூலம் வேளாண் பயிர்க்கடன், விவசாய இடு பொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய உதவி திட்டங்கள் இதர துறைகளின் உழவர் நலதிட்டங்கள் ஆகியவற்றைப் பெற முடியும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் முகாம்கள் மூலம் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்களால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொது சேவை மையங்கள் மூலமாகவும் இப்பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு மேற்கொள்ள பட்டா, சிட்டா, ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன்களோடு  சென்று பதிவு மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 761 விவசாயிகள் இருக்கும் நிலையில் இதுவரை 1 லட்சத்து 83 ஆயிரத்து 771 விவசாயிகள் மட்டுமே பதிவேற்றம் செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் வருகிற 30-ந் தேதிக்குள் தங்கள் கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் நிலஉடைமைகள் விவரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.இப்பதிவேற்றத்திற்கு கட்டணம் ஏதுமில்லை என  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top