கேலோ இந்தியா திட்டத்திற்காக, வாலிபால் பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கேலோ இந்தியா (விளையாடு இந்தியா) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை வாலிபால் பயிற்சிக்கான மாவட்ட மையம், நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் அமைக்கப்பட உள்ளது.
இம்மையத்தில் 30-100 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி வாலிபால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட வாலிபால் வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
- விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு குறையாமலும், தற்போதும் நாமக்கல் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும்.
- சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப்போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.
- தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ. 25,000 வழங்கப்படும்.
- இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைளோ நிரந்தரப்பணியோ கோர இயலாது.
- தகுதியானவர்கள் நாமக்கல் விளையாட்டு அலுவலகத்தில், அதற்கான விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஜூலை 1ம் தேதி, மாலை 5 மணிக்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வருகிற ஜூலை 3ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நடைபெறும் என டிஆர்ஓ சுமன் தெரிவித்துள்ளார்.




