திருச்செங்கேட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்ட அமைக்க வேண்டும் என கொமதேக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல்லில் கொமதேக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி., சின்ராஜ், மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஈஸ்வரன், எம்எல்ஏ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
- நாமக்கல் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, திருச்செங்கோட்டை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும்.
- காவிரி – திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
- பரமத்தி வேலூரில் மீண்டும் வெற்றி ஆராய்ச்சி மையம் செயல்பட வேண்டும்.
- ராசிபுரம் நகரில் பாதாள சாக்கடை மூலம் வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
- திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலி ஏரி மற்றும் பரமத்தி வேலூர் அருகே உள்ள இடும்பன் குளம் ஏரி ஆகியவற்றை தூர்வாரி தூய்மைப்படுத்த வேண்டும்
என்பவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாநில நிர்வாகிகள் சந்திரசேகர், மணி, நாமக்கல் புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்மணி, மேற்கு மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




