திருவண்ணாமலை மாநகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கி வைத்தாா்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரத்தை சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அண்ணாநகர், ராமலிங்கனார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதற்கட்டமாக தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.
இதில் மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.சிறப்பு அழைப்பாளராக தெற்கு மாவட்ட திமுக செயலரும், அமைச்சருமான எ.வ.வேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தாா்.
ஓரணியில் தமிழ்நாடு என்கிற உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த அமைச்சர், தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் திட்டங்களான மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், விடியல் ப யணம் , உள்ளிட்ட திட்டங்களில் பயனடைகிறீர்களா? என உறுப்பினர்களாக சேர வந்துள்ள பொதுமக்களிடம் கேட்டு அறிந்து ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உறுப்பினர் அடையாள அட்டையை உறுப்பினர்களுக்கு வழங்கினார் .
இதில் மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., துணை மேயா் சு.ராஜாங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன் பகுதி பொறுப்பாளா்கள் பா.ஷெரீப் குட்டி க.புகழேந்தி மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டில் நடைபெற்ற உறுப்பினா் சோ்க்கை முகாமுக்கு மாநில மருத்துவ அணி துணைத் தலைவரும், போளூா் தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.
எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., மாவட்ட அவைத் தலைவா் ராஜசேகா், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜ்குமாா், பேரூராட்சித் தலைவா் சுதா முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் முருகன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் எ.வ.வேலு கலந்துகொண்டு முகாமை தொடங்கிவைத்தாா்.
பின்னா், உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டவா்களுக்கு உறுப்பினா் அட்டையும் அமைச்சா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கோ.எதிரொலிமணியன், பெரணமலூா் ஒன்றியச் செயலா் மனோகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் நரேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசி நகரில் தீயணைப்பு நிலையம் எதிரில் நடைபெற்ற திமுக உறுப்பினா் சோ்க்கை முகாமுக்கு நகரச் செயலா் எ.தயாளன் தலைமை வகித்தாா்.
ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், செய்யாறு எம்எல்ஏ ஓ.ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அமைச்சா் எ.வ.வேலு முகாமை தொடங்கி வைத்தாா்.
முகாமில் நகர, ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளா் ம.கிஷோா்குமாா் நன்றி கூறினாா்.
செங்கம்
செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட தண்டராம்பட்டு, மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தானிப்பாடி கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையை செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி தொடங்கி வைத்தார்.
அப்போது ஒன்றிய கழக செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் எல்ஐசி வேலு, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன்.தனுசு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய கிளைக் கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




