Close
மார்ச் 7, 2026 1:33 மணி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: நாமக்கல் மாவட்டத்தில் 36,436 பேர் எழுதுகின்றனர்

புதுக்கோட்டை

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள, டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 124 மையங்களில் மொத்தம் 36,436 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஜூனியர் அசிஸ்டெண்ட், ஆர்.ஐ., விஏஓ., டைப்பிஸ்ட்உள்ளிட்ட 3,935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 போட்டித்தேர்வு, வரும் 12ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இத்தேர்வை எழுத 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், சேந்தமங்கலம், மோகனூர், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் ஆகிய 7 தாலுகாக்களில் 124 மையங்களில் நடைபெறுகிறது.

இத்தேர்வை 36,436 பேர் எழுத உள்ளனர். இதற்காக 124 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை தாசில்தார் நிலையில் 12 பறக்கும் படைகள், தேர்வுப் பொருட்களை எடுத்துச் செல்ல மண்டல துணை தாசில்தார் நிலையில் 32 நடமாடும் குழுக்கள், ஆ.ஐ நிலையில் 124 பேர், ஒரு தாலுகாவிற்கு ஒருவர் வீதம் மொத்தமாக தேர்வுப் பணிகளை கண்காணிக்க சப் கலெக்டர்கள் 7 பேர் மற்றும் டிஆர்ஓ ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 129 வீடியோ கேமராக்களும், 124 கண்காணிப்பு கேமராக்களும் தேர்வுக்கான வினாத்தாள் மையத்திலும், தேர்வு அறைகளிலும் பொருத்தப்படுகின்றன. குரூப் 4 தேர்வு நடைபெறும் 124 மையங்களிலும் தலா 2 போலீசார் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top