Close
மார்ச் 7, 2026 2:51 மணி

தமிழக அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வென்ற புதுக்கோட்டை மாணவர்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி நடத்திய தமிழ் உயிர்மெய் சுட்டிகள் எனும் மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஜெ. அதியன் இரண்டாம் இடம் பிடித்தார்.

இரண்டாம் இடம் பிடித்து மாணவர் அதியன் பரிசுத் தொகையாக ரூ. 75,000 வென்றார். புதுக்கோட்டைக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த வெற்றி பெற்ற மாணவருக்கு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top