Close
மார்ச் 7, 2026 1:47 மணி

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் துவக்கி வைத்தார்

நாமக்கல்லில் நடைபெற்ற உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துர்காமூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல்லில் நடைபெற்ற உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

ஆண்டு தோறும், குடும்ப நலத்துறை சார்பில், ஜூலை, 11ம் தேதி, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு, ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப்பேறு, திட்டமிட்ட பெற்றோர்கான அடையாளம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் உலக மக்கள்தொகை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, பேரணியை துவக்கி வைத்தார்.

கல்லூரியில் துவங்கிய பேரணி, டாக்டர் சங்கரன் ரோடு, மோகனூர் ரோடு, மணிக்கூண்டு, திருச்சி ரோடு வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில், பிறப்பு விகிதத்தை குறைக்க பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்; பெண்ணுக்கு 21 வயதுக்கு பின் திருமண ஏற்பாடு செய்வோம்; சத்துணவை இனம் கண்டு உண்போம்; உடலை உள்ளத்தை சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவோம். பெண் சிசு கொலையை தடுத்து, பெண் குழந்தையைப் பேணி காப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பாதாதைகளை மாணவிகள் ஏந்தி சென்றனர்.

தொடர்ந்து, கல்லூரி கலையரங்களில், மக்கள் தொகை அதிகரிப்பதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள், ஆணும், பெண்ணும் சமம், பெண்கல்வியின் முக்கியத்துவம், இளம் வயது திருமணத்தை தவிர்த்தல், இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல், பெண் பாலின விகிதத்தை அதிகரிப்பது மற்றும் குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கோவிந்தராசு, தொழுநோய் திட்ட துணை இயக்குனர் ஜெயந்தினி உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top