Close
மார்ச் 7, 2026 4:26 மணி

விவசாயிகள் கூட்டம் ஒத்தி வைப்பு: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

வருகின்ற 18.07.2025 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்ற 25.07.2025 அன்று நடைபெறவுள்ளது  என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்தார்.

வருகின்ற 18.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமானது, நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்பட்டு, வருகின்ற 25.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

மேலும், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 25.07.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு  தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top