தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் செயல்பட்டு வரும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள விடுதியில் 53 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த விடுதியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 11-ம் மற்றும் 12-ம் வகுப்பு, 6ம் வகுப்பு பயின்று வரும் புன்னையாபுரம், கேரளா, போகநல்லூர் பகுதியை சேர்ந்த 9 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வேறு யாருக்கும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தற்போது பள்ளியில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்ட 6 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து பிரபல தொப்பி வாப்பா பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்ட 13 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பிரச்சினையாக அரசு பள்ளியில் உள்ள விடுதியில் உணவு சாப்பிட்ட 9 மாணவிகளுக்கு உணவு ஒவ்வாமை நோய் ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.




