நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், உலக இளையோர் திறன் தின விழாவை முன்னிட்டு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின், எனது இளைய பாரதம் திட்டம் மற்றும் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நுண்கலை மன்றம், என்எஸ்எஸ், என்சிசி சார்பில் உலக இளையோர் தின விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (பொ) ராஜேஸ்வரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நுண்கலை மன்றம் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், மை பாரத் அலுவலகத்தின் தேசிய சேவை தொண்டர் முகமது நிஷார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொருளியல் துறைத்தலைவர் மாதவன், விலங்கியல் துறைத்தலைவர் பாண்டியன், கல்லூரி என்சிசி அலுவலர் சவுந்திரராஜன், என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தேசிய சேவை தொண்டர் ஆனந்த ஜோதி, கோகுல், ஹரிஹரன், தாமரைகண்ணன், பிரியங்கா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திறன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கலந்துகொண்ட 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.




