நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், சிசிடிவி கேமராக்களை, கொமதேக எம்.பி., மாதேஸ்வரன் துவக்கி வைத்தார்.
நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நாமக்கல் லோக்சபா தொகுதி கொமதேக எம்.பி. மாதேஸ்வரன் தனது சொந்த செலவில் சிசிடிவி கேமரா அமைத்துக்கொடுத்துள்ளார். இதையொட்டி கண்காணிப்பு கேமராக்கள் திறப்பு விழா மாவட்ட தீரன் தொழிற்சங்க செயலாளர் இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது.
மாதேஸ்வரன் எம்.பி. விழாவில் கலந்துகொண்டு சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து கேமராக்களை இயக்கி வைத்தார்.
கொமதேக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் மணி, தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகதீஷ் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.




