மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்காக 32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட, ரூ. 10.91 லட்சம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியாக, ரூ. 6 லட்சத்து 63 ஆயிரத்து 507, கூட்டுறவு கல்வி நிதியாக ரூ. 4 லட்சத்து, 27 ஆயிரத்து 764 என, மொத்தம் ரூ. 10.91 லட்சத்திற்கான காசோலையை கூட்டுறவாளர்கள் வழங்கினார்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வானக்காரன்புதூர், என்.வெள்ளாளப்பட்டி, எம்.புதுக்கோம்பை, பழையபாளையம், கெஜக்கோம்பை, புதுக்கோம்பை, போடிநாயக்கன்பட்டி, ரெட்டிப்பட்டி, பொட்டணம், மின்னாம்பள்ளி, புதுச்சத்திரம் உள்ளிட்ட, 32 பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பெறப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதிக்காக ரூ. 10.91 லட்சம் ரூபாய்க்கான காசோலை, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு ஒன்றியத்திற்காக செலுத்தப்பட்டது.
நாமக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அருளரசு, ஆவின் பொது மேலாளர் சண்முகம், பால்வளம் துணை பதிவாளர் சண்முகநதி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்,




