நாமக்கல்லில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
துவக்க விழாவிற்கு நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கண்காட்சியை துவக்கி வைத்துப் பார்வையிட்டார்.
கண்காட்சியில், விவசாயிகளுக்கு இயற்கை மற்றும் அங்கக வேளாண்மை குறித்த தொழில்நுட்பங்களை விளக்கவும், நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள்அறிந்து கொள்ளும் வகையிலும், முன்னோடி விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைக் கொண்டு அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தப்பட்டது.
பல்வேறு வேளாண்மைத்துறை மற்றும் வேளாண் கல்லூரி அறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொணடு விவவாயிகளுடன் கலந்துரையாடினார்கள். மேலும், விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலிருந்தும் திரளான விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.




