Close
மார்ச் 7, 2026 1:31 மணி

திருவண்ணாமலையில் எஸ்எஸ்சி, ஆர்ஆர்பி தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் இரயில்வே பணியாளர் தேர்வாணையம் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

14,582 காலிப் பணியிடங்களுக்கான எஸ்எஸ்சி, சிஜிஎல், (பட்டப் படிப்பு) தேர்வுக்கும், 3,131 காலிப்பணியிடங்களுக்கான எஸ்எஸ்சி, சிஎச்எஸ்எல் (பத்தாம் வகுப்பு) தேர்வுக்கும் 1,075 காலிப் பணியிடங்களுக்கான எஸ்எஸ்சி, எம்டிஎஸ் (பத்தாம் வகுப்பு) தேர்வுக்கும், 6,238 காலிப் பணியிடங்களுக்கான ஆர்ஆர்பி (ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்ப படித்தவர்களுக்கு) தேர்வுக்கும். அறிவிக்கப்பட்டுள்ளன.

30,307 காலிப்பணியிடங்களுக்கான ஆர்ஆர்பி, என்டிபிசி தேர்வுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இத்தேர்வுகள் பற்றிய முழு விவரங்களை www.ssc.nic மற்றும் www.rrbchennal.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். MySSC அலைபேசி செயலி வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் 30.07.2025 அன்று முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, மதியம் 2 மணி முதல் மதியம் 4 வரை ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு டிஜிட்டல் போர்டு வழியாக நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வமும், விருப்பமுள்ளவர்கள் நேரடியாக தொடர்பு கொண்டும், 04175-233381 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு பயன் பெறலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top